2 தொலைதூர ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-அன் மேற்பார்வையில் அந்நாடு தொலைதூரம் சென்று துல்லியமுடன் தாக்க கூடிய 2 ஏவுகணைகளை செலுத்தி பரிசோதித்து உள்ளது. இந்த பரிசோதனையானது, நீண்டதொலைவு சென்று தாக்க கூடிய ஏவுகணைகளின் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமைந்து உள்ளது. எதிரி நாடுகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் அணு ஆயுத குவிப்பில் தொடர்ந்து வடகொரியா ஈடுபட்டு வருகிறது. இந்த பரிசோதனையின் முடிவில் கிம் அதிக திருப்தியடைந்து உள்ளார்.
Tags :