2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜைக்கு 40 கோடி ஒதுக்கீடு.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ,இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா ரூ.2 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிநிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிநிறுவனத்தின் தலைவர், மேலாண்மை இயக்குநர் கே.கோபாலிடம் வழங்கினார்.இந்த நிகழ்வில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Tags :