கடற்படை கமாண்டரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபேஸ்

by Staff / 16-10-2022 01:47:54pm
கடற்படை கமாண்டரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபேஸ்

மும்பையை சேர்ந்த கடற்படை கமாண்டரின் மனைவிக்கு கடந்த 13ம் தேதி அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. இதில் பேசிய ஆசாமி மின்கட்டணம் செலுத்தாவிடில்,மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தார். இதுகுறித்து, அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். இதன்படி கடற்படை கமாண்டர் அழைப்பு விடுத்த நம்பரை தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசிய ஆசாமி மின்கட்டணம் செலுத்த ஏதுவாக குயிக் சப்போர்ட் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ரூ.10-ஐ அனுப்புமாறு தெரிவித்தார். அதன்படி கடற்படை கமாண்டரின் வங்கி கணக்கில் இருந்து பல தடவை பரிமாற்றம் மூலம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபேஸ் ஆனது. இதனை கண்ட அவர் உடனடியாக வங்கியில் தெரிவித்து கார்டை பிளாக் செய்தார். இதனை தொடர்ந்து அவர் மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via