மருத்துவமனைக்குள் இளைஞர்களை பிரித்து மேய்ந்த நர்ஸ்

by Staff / 19-10-2022 01:27:04pm
மருத்துவமனைக்குள்  இளைஞர்களை பிரித்து மேய்ந்த நர்ஸ்

பீகாரில் உள்ள மருத்துவமனையில் இரண்டு இளைஞர்கள் செவிலியர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, பின், அறைக்குள் அடைத்து வைத்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாப்ராவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.அந்த வீடியோவில், இளைஞர்கள் தங்களை அடிக்க வேண்டாம் என்று பலமுறை கூறிய போதிலும், இளம் செவிலியர் அவர்களை குச்சியால் அடித்துள்ளார். அவர்களது அருகில் மற்றொரு நர்ஸும் உடன் இருந்தார்.

மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக இளைஞர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். ஆனால் அங்கு முறையான பணி எதுவும் நடக்காததை உணர்ந்த இளைஞர்கள் இதனை தங்களது அலைபேசியில் படம்பிடிக்கத் தொடங்கினார். இதுவே செவிலியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் செவிலியர்கள் இளைஞர்களை ஆபாசமான வார்த்தைகளில் திட்டுவதையும் கேட்கமுடிகிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via