காலியான சென்னை மாநகரம்
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனையொட்டி சென்னையில் 6 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக 10,588 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.தீபாவளியை முன்னிட்டு திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு மொத்தம் 38 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்தனர். இதுவரை ரயில்களில் 3.42 லட்சம் பேர், அரசுப் பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 55 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். இதுதவிர ரயில்கள், கார்கள் உள்பட பிற வழி போக்குவரத்து மூலம் மொத்தம் 9 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
Tags :