தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், தற்போது புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, வரும் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
Tags :