லெஸ்பியன்’ விவகாரத்தில்... குடுமிப்பிடி சண்டை.

by Editor / 27-10-2022 07:33:18pm
லெஸ்பியன்’ விவகாரத்தில்... குடுமிப்பிடி சண்டை.

சேலம் ஏற்காடு ரோட்டில் பெண்களுக்கான கிளை சிறைச்சாலை செயல்பட்டுவருகிறது.இங்கு 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பெண் வார்டன்கள் 3 ஷிப்ட் அடிப்படையில் வார்டன்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சிறையில் சில வார்டன்களிடையே ‘லெஸ்பியன்’ பழக்கம் தொடர்பாக நடந்த அடிதடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்தான வார்டன் ஒருவரும், கணவரை பிரிந்து வாழும் வார்டன் ஒருவரும் ஒன்றாக வசித்துள்ளனர். இருவருக்குமிடையே லெஸ்பியன் பழக்கம் இருந்ததாகவும், இந்நிலையில் விவாகரத்தான வார்டன், இன்னொரு புது வார்டனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதால் சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் கடந்த சில வாரத்திற்கு முன்பு வெடித்ததாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அதிகாரியான மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் விசாரணை நடத்தி வருவதாகவும்,இதுகுறித்து மற்ற வார்டன்கள் கூறுகையில் இரு வார்டன்களும் இரவு நேரங்களில் சிறையிலேயே உறவு வைத்துக்கொள்கின்றனர் என்றும்  தங்களுக்கு நீதிமன்றமே அனுமதி வழங்கிவிட்டதாகவும்  கூறிவருவருவதாகவும் இந்நிலையில்தான் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் . இதுகுறித்து சிறை விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளன.

 

Tags :

Share via