15 வயது சிறுமி கர்ப்பம்

by Staff / 29-10-2022 05:20:21pm
15 வயது சிறுமி கர்ப்பம்

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருக்கு 15 வயதான மகள் இருக்கிறார். இந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அவரது தாயார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். சிறுமியின் தாயார் இதை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தார். அப்போது சிறுமி தான் கர்ப்பமானதற்கு வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் (40) என்பவரே காரணம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வீட்டு உரிமையாளர் என்பதால் சிறுமி, வெங்கடேசன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். இதில் சிறுமி மீது வெங்கடேசனுக்கு மோகம் ஏற்பட்டது. ஒருநாள் வெங்கடேசன், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது போல் வெங்கடேசனின் உறவினர் வேங்கையன் (36) என்பவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதே போல் வெங்கடேசனின் மேலும் 2 நண்பர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவளது வாழ்க்கையை சீரழித்துள்ளனர். வெங்கடேசன் இதே போல் பலமுறை மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதற்கு வெங்கடேசனின் தாயார் விஜயா, சகோதரி லலிதா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியானது. போலீசார் 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

Tags :

Share via