100க்கணக்கான டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்பட சில மாவட்டங்கள் மற்றும் தேவர் குருபூஜைக்கு வரும் வழிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக தேனியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் 36 மதுக்கடைகளை இன்று மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தூத்தக்குடி மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :