ரயிலில் 4. 5 கிலோ கஞ்சா பறிமுதல்

by Staff / 30-10-2022 05:16:47pm
ரயிலில் 4. 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை அந்த ரெயில் சேலம் வந்தபோது சப்-இன்ஸ்பெக்டர் பால முருகன், ஏட்டுக்கள் பாணலசுப்பிரமணியன், கண்ணன், ரமேஷ்குமார் ஆகியோர் ரயிலில் ஏறி சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே ஒரு கருப்பு நிற பை கேட்பாரற்று கிடந்தது. அந்த பையை சோதனை செய்த போது அதில் 4 பண்டல்களில் 4. 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை போலீஸ் நிலையம் கொண்டு வந்த போலீசார், கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via