தாயின் அறிவுரையால் சரணடைந்த சகோதரர்கள்....கோவை கார் வெடிப்பு

by Staff / 31-10-2022 12:48:29pm
 தாயின் அறிவுரையால் சரணடைந்த சகோதரர்கள்....கோவை கார் வெடிப்பு

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் அதிகாலை கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் பலியானார். பின்னர் ஜமேஷா முபின் அவரது வீட்டிலிருந்து வெளியேறிய சிசிடிவி காட்சி வெளியானது. இந்த காட்சியில் ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் இருக்கின்றனர். அவர் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் முபின் காரில் சிலிண்டர் ஏற்றிய 3 பேரும் அவர்களது தாயார் கூறியதால் தாமாக போலீசில் சரணடைந்துள்ளனர். அவர் சகோதரர்கள் பிரோஸ், நவாஸ் மற்றும் அண்டை வீட்டுக்காரரான முகமது ரியாஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது. தாயார் அறிவுரையின் பேரில் சகோதரர்கள் சரணடைந்து உள்ளனர்.
 

 

Tags :

Share via