மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பாலச்சந்திரா விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா என்பவருடைய மகன் சுரேஷ் (வயது 37) கூலித் தொழிலாளி தனது வீட்டில் அருகே உள்ள இடத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது இதில் சம்பவ இடத்தில் சுரேஷ் பலியானார் அவருக்கு முத்து பிரியா (வயது 28) என்ற மனைவியும் பபிஷா ( வயது 7) சுகி (வயது 4) என்ற இரு மகள்களும் உள்ளன.இந்த விபத்து குறித்து அவரது தாயார் போலீசில் அளித்த்துள்ள புகாரில் மின்சாரவாரியத்தினரின் கவனக்குறைவால் தனது மகன் பலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Tags :