ராகுல் காந்தியாத்திரை-  முன்னாள் அமைச்சர்  கார் விபத்து!

by Editor / 06-11-2022 10:42:24am
ராகுல் காந்தியாத்திரை-   முன்னாள் அமைச்சர்  கார் விபத்து!

 

 

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை நாளை மகராஷ்டிரா மாநில எல்லையை அடைகிறது. நான்டெட் மாவட்டத்தில் யாத்திரை தொடங்குவதால் அதற்கான ஏற்பாடுகளை அம்மாவட்டத்தில் பொறுப்பு வகிக்கும் முன்னாள் அமைச்சர் மந்திரி ஆரிப் நசீம் கான், காங்கிரஸ் முக்கிய நிர்வாகியான எச்.கே.பாட்டீல் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பணிகளை பார்வையிடுவதற்காக ஆரிப் நசீம் கான் நான்டெட் பகுதிக்கு காரில் சென்றார். பிலோலி சுங்கசாவடியை அடைந்தபோது எதிர்பாராதவிதமாக கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆரிப் நசீம் கான் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

Tags :

Share via