இறந்த காதலிக்கு தாலி கட்டிய காதலன்
அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான பிடுபன் என்ற இளைஞரும், பிரத்தனா போரா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் இருவீட்டாருக்கு தெரிய வந்த நிலையில், அவர்களது பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரத்தனா போராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதலி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன், காதலியின் இறுதி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தான். இந்நிலைியில், காதலியின் இறுதி சடங்கில் இறந்த காதலிக்கு தாலி கட்டி கண்ணீர் வடித்தான். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Tags :