மணிமுத்தாறு அருவியில் 10 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி
தமிழகத்தின் பிரசித்தி பெற்றதும் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அருவியுமான நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 10 நாட்களுக்கு மேலாக வனத்துறை தடை விதித்திருந்தது. இந்தநிலையில் நீர்வரத்து குறைந்ததால் இன்று (புதன்கிழமை) முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்து இருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : மணிமுத்தாறு அருவி