10 நாட்களில் சபரிமலை வருமானம் 52 கோடியாக உயர்வு

by Editor / 28-11-2022 06:55:17am
10 நாட்களில் சபரிமலை வருமானம் 52 கோடியாக உயர்வு

சபரிமலையில்  மண்டல பூஜைகாலம் தொடங்கி 10 நாட்கள் ஆகிறது. இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் சுமூகமாக நடப்பதாகவும், பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சபரிமலை அப்பம் விற்பனை,உண்டியல் காணிக்கை  உள்ளிட்டவையில் சேர்த்து 52 கோடி 55 லட்சம் வசூலாகி உள்ளது.இதில் அரவணை விற்பனை மூலம் 23 கோடியே 58 ரூபாயும் ரூபாய் 12 கோடியே 74 லட்சமும்,அப்பம்  விற்பனையில் ரூபாய் 2 கோடியே 58 லட்சமும், தங்கும் விடுதிகள் மூலமாக ரூபாய் 49 லட்சமும் கிடைத்துள்ளது, இந்த வருமானத்தில் பெரும் பகுதி திருவிழா நிர்வாகத்திற்காக செலவு செய்யப்படுவதாகவும் அடுத்த 20 நாட்கள் தேவைக்காக 51 லட்சம் டின் அரவனை இருப்பில் உள்ளதாகவும் தினமும் சராசரியாக இரண்டரை லட்சம்  டின் அரவணை விற்பனை ஆவதாகவும்,பக்தர்களுக்கு எந்த குறையும் வராத அளவு ஆலய வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகும், சபரிமலைக்கு பக்தர்கள் வருவதற்காக 52'இடங்களில் தங்கும் விடுதிகளும் அனைத்து பாதைகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நீலிமலை பாதையில் உள்ள பணிகள் அடுத்த வாரம் நிறைவு பெறும் என்றும் சன்னிதானம், பம்பை, நிலக்கல்,ஆகிய மூன்று இடங்களில் 3நேரமும் அன்னதானம் வழங்கப்படுவதாகவும் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

10 நாட்களில் சபரிமலை வருமானம் 52 கோடியாக உயர்வு
 

Tags : சபரிமலை வருமானம்

Share via