ரத்தகாயங்களுடன் பெண் சடலம்

by Staff / 29-11-2022 03:52:02pm
ரத்தகாயங்களுடன் பெண் சடலம்

பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியை சேர்ந்த விவசாயியின் மனைவியான நாகவேணி தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றவர் திரும்பி வரவில்லை. ஆனால் மாடுகள் மட்டும் திரும்பி வந்தன.

இதனையடுத்த நாகவேணியை தேடி அவரது உறவினர்கள் சென்ற போது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நாகவேணி ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல்துறையினருக்கு தலவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via