கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த கைதி உயிரிழப்பு.

by Editor / 03-12-2022 09:00:52am
கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த கைதி உயிரிழப்பு.

 சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 61). என்பவர் கடந்த 2002-ம் ஆண்டு தேர்தல் முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்த வழக்கில் கன்னங்குறிச்சி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 இந்த நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேவராஜிக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறை காவலர்கள் சிகிச்சைக்காக சேலம்  அரசு மருத்துவமனைக்கு  அழைத்து வந்தனர். ஆனால்  வழியிலேயே தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து  மாஜிஸ்திரேட்டு மற்றும் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via