காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் டிஜிபி சைலேந்திர பாபு
மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்கு காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்த உத்தரவு அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், மீட்பு படையினரோடும், தன்னார்வலர்களோடும் இணைந்து காவல்துறை செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags :