நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

by Staff / 15-12-2022 02:18:26pm
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

ஈரோடு மாவட்டம் கடம்பூர் சின்ன சாலட்டி பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு நேற்று சென்று விசாரணை நடத்தியதில் கடம்பூர் சின்ன சாலட்டி கொட்டினக் காடடு பகுதியில் குப்புசாமி (53) என்பவரது ஓலை குடிசையில் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்த கடம்பூர் போலீசார் குப்புசாமி மீது வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்

 

Tags :

Share via