மனைவியை தாக்கிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
திருத்தணி ஒன்றியம், மத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் மகள் ஷாலினி (வயது 22). இவருக்கும் மத்தேரி பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் கணவர், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து அவர்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். கடந்த 15ம் தேதி, இரு வீட்டார் நடத்திய பேச்சில் கணவர், மனைவி பிரிந்து வாழ்வதாக முடிவு செய்தனர்.மேலும் ஷாலினி அவரது தாயுடன் நேற்று முன்தினம் திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது குமரவேல் தன் உறவினர் தேசப்பனுடன் பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஷாலினியை தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கினார்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்து, சமூக வலைதளத்தில் உன்னை பற்றி தவறாக சித்தரித்து வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இது குறித்து ஷாலினி அளித்த புகாரையடுத்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து குமரவேல் மற்றும் அவரது உறவினர் தேசப்பன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
Tags :