அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

by Admin / 26-12-2022 10:25:24pm
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு


தமிழக அரசு  சி ,டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  பொங்கல் பரிசாக ரூ.3000 யும் ஒய்வுபெற்ற சி,டி பிரிவுஊழியர்களுக்கு ரூ500 வழங்கப்படஉள்ளது

.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,அரசின் நலத்திட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ,ஒய்வூதியர்கள்  மற்றும் குடும்ப மிகை ஊதியம்பெறுவோருக்கு பொங்கல் பரிசு வழங்கிடமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவின் பேரில்  சி மற்றும் டி பிரிவை  சேர்ந்த  அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  ரூ.3000 என்ற உச்சவரம்பிற்குட்பட்ட மிகை ஊதியம் வழங்கப்படும். இதே  போல் தொகுப்பூதியம்,சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள்  மற்றும்  நிதியாண்டில்  குறைந்த  பட்சம்  240 நாட்கள்  அல்லது  அதற்கு  மேல்
பணிபுரிந்து சில்லறை  செலவினங்கள்  கீழ் மாத  அடிப்படையில்  நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும்பகுதிநேர பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ 1000 மிகை ஊதியம் வழங்கப்படும்.மேலும் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த மற்றும்  குடும்ப ஒய்வூதியர்கள்,கிராம பணியமைப்பு(முன்னாள் கிராம அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள்மற்றும் அனைத்து வகை தனி ஒய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories