நள்ளிரவில் மேம்பாலங்களில் பயணம் செய்ய தடை
புத்தாண்டையொட்டி நள்ளிரவில் மேம்பாலங்களில் பயணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் சைலன்ஸர்களை பொருத்தி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.பைக் ரேஸிலி ஈடுபடக் கூடாது என்றும் தீப்பொறி உருவாக்கும் வகையில் சாலையில் இரும்புக் கம்பிகளை தேய்த்து கொண்டு செல்ல கூடாது என்றும் கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags :