100 நாள் வேலைவாய்ப்பு டிஜிட்டல் வருகைப்பதிவு இன்று முதல் அமல் மத்திய அரசு அறிவிப்பு.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களின் தினசரி வருகையினை (புகைப்படத்தை)ஜனவரி 1ஆம் தேதியான இன்று முதல் நேஷனல் மொபைல் மானிடரிங் சிஸ்டம் NMMS என்ற செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்றும் ஆதலால் பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் அனைத்து பணியாளர்களும் வேலை நாட்களில் முற்பகல், மற்றும் பிற்பகல்,என இருவேளையும் குறித்த நேரத்தில் பணித்தள பொறுப்பாளரால் நேஷனல் மொபைல் மானிட்டரின் சிஸ்டம் என்ற NMMS செல்போன் செயலில் தங்களது (புகைப்படத்தை) தினசரி வருகையினை தவறாது பதிவு செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது மேலும் இது குறித்து புகார்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட குறை தீர்ப்பாளரை அணுகவும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Tags :