நெல்லை கிரைம் செய்திகள் 

by Editor / 29-06-2021 07:00:47pm
நெல்லை கிரைம் செய்திகள் 

 

பாட்டியை அரிவாளால் வெட்டிய பேரன் 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டியில் குடிக்க பணம் தர மறுத்த பாட்டியை பேரன் அரிவாளால் வெட்டினார். அயன் சிங்கம்பட்டி இந்திரா காலனியில் வசிப்பவர் பேச்சியம்மாள். இவரது மகன் வழி பேரன் வன சுந்தர் என்பவர் தனது பாட்டியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பேச்சிஅம்மாள் பணம் தர மறுத்ததால் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாட்டியை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பேச்சியம்மாள் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-----------------
கல்லூரி பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை டவுனில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில்வேல் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்

 

Tags :

Share via

More stories