பணத்திற்காக கருமுட்டைகளை விற்ற பெண்

by Staff / 19-01-2023 03:56:54pm
பணத்திற்காக கருமுட்டைகளை விற்ற பெண்

குஜராத் மாநிலம் அம்ரைவாடி பகுதியில் பெண் ஒருவர் ஆடம்பரமாக வாழ்வதற்காக தனது கருமுட்டைகளை விற்ற சம்பவம் நடந்துள்ளது. ஜூன் 2019-2022 க்கு இடையில் ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து இவர் தனது கருமுட்டைகளை பல முறை விற்றதாக பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தாயாருடன் சேர்ந்து போலி கையெழுத்து போட்டு மோசடி செய்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via