மனைவியை குத்திக் கொன்ற கணவன்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அழிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர், புனிதா தம்பதி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் புனிதாவின் நடத்தையில் ஜெய்சங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்ல புனிதா அழிஞ்சிகுப்பம் சாலையில் நடந்து சென்றபோது, ஜெய்சங்கர் புனிதாவை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றார்.இந்நிலையில் நேற்று ஜெய்சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடு ரோட்டில் கணவன் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :