மாலை 6 முதல் காலை 6 வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் -  ஆட்சியர்

by Editor / 04-02-2023 08:02:28pm
மாலை 6 முதல் காலை 6 வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் -  ஆட்சியர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த இருகூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக நாய் மற்றும் பசு கன்றை மரம்விளங்கு கடித்தது தொடர்பாக வனத்துறையினர் ஆய்வு செய்ததில் சிறுத்தையின் கால் தடம் உறுதி செய்யப்பட்டுள்ளது,சிறுத்தையின் இருப்பிடத்தை கண்டறிய சுற்று வட்டார பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையை தேடும் பணி துவங்கி உள்ளதாகவும் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு முதல்  காலை 6 மணி வரை வீட்டை விட்டு யாரும் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என்றும் ,வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும்  அந்தந்த ஊராட்சிகள் மூலம் பொதுமக்களை அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் நாமக்கல்  மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பிசிங் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்..

 

Tags :

Share via