சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

by Staff / 11-02-2023 12:07:11pm
சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு கோவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமையில் கோவில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பூஜைகளை நடத்துகிறார். பிப்ரவரி 12ஆம் தேதி பூஜைகள் இருக்காது. இரவு 10 மணிக்கு மூடப்படும். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். மேலும் மகாகணபதி ஹோமம், நெய்யாபிஷேகம், உச்ச பூஜை நடைபெறும். புஷ்பாபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை ஆகியவையும் நடக்கும். தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

 

Tags :

Share via