தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையுடன் ரோந்துப்பணி. 

by Editor / 14-02-2023 11:00:47pm
தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையுடன் ரோந்துப்பணி. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம் கொள்ளைச்சம்பவம் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனைகளை  நடத்திவருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் ஏ.டி.எம்.கொள்ளையை தடுக்கும் வண்ணம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி ,அச்சன்புதூர், சாம்பவர் வடகரை, ஆலங்குளம், சுரண்டை, வி.கே புதூர், ஊத்துமலை, பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, புளியங்குடி, வாசுதேவநல்லூ,ர் சிவகிரி, கடையநல்லூர், சேர்ந்த மரம், சொக்கம்பட்டி, சங்கரன்கோவில் டவுன், தாலுகா, சின்ன கோவிலாங்குளம், குருவிகுளம், கரிவலம்வந்தநல்லூர், பனவடலிசத்திரம், திருவேங்கடம், அய்யாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்களை தடுப்பதற்காக இரண்டு டி.எஸ்.பி.க்கள் தலைமையில் எட்டு ஆய்வாளர்கள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

 

Tags :

Share via