அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

by Staff / 16-02-2023 03:21:36pm
அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் சிறுசேரி வரையிலான 5-வது மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான,  திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பசுமை வழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்க சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு காவேரி என பெயரிடப்பட்டுள்ளது.சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து, இயங்குவதற்கு தயாராக உள்ள நிலையில், சென்னையின் மிக முக்கிய இடமாக கருதப்படும் அடையாறு கூவும் ஆற்றின் அடியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்கம் தோண்டும் பணியை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று தொடங்கி உள்ளது.100 நாட்கள் அடையாறு ஆற்றில் அடிப்பகுதியில் சுரங்கம் தோன்றும் பணி நடைபெற உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள அடையாறு ஆற்றின் அடியில் ஒரு நாளைக்கு பத்து மீட்டர் வரை சுரங்கம் தோண்டும் பணி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில், முதற்கட்டமாக மாதவரத்தில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via