2 பேர் அடித்துக்கொலை

by Staff / 17-02-2023 11:51:18am
2 பேர் அடித்துக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் காத்மிகாவில் ஜுனைத் மற்றும் நசீர் என்ற இரண்டு இளைஞர்கள் மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டனர். அவர்கள் பசு மாட்டை திருட முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கடத்தப்பட்டனர். பின் இருவரும் அடித்தே கொல்லப்பட்டு, அவர்கள் உடல் எரிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள், இதை செய்தது பஜ்ரங் தால் அமைப்பினர் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via