உயிரிழந்தார் வீட்டில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

by Staff / 20-02-2023 11:32:01am
உயிரிழந்தார் வீட்டில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

 திருவொற்றியூரில் +1 மாணவி அபிநயா கடந்த 14ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் காது அறுவை சிகிச்சை செய்து இதயத்துடிப்பு அதிகமாகி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று அவரது வீட்டில், உடலை பிரீசர் பாக்ஸில் வைத்து, உறவினர்கள் அழுது கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஃப்ரீசர் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து அருகிலிருந்த 5 பேருக்கு மின்சாரம் பாய்ந்தது. இதில், காசிமேடைச் சேர்ந்த அஜித்குமார்(21) படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற நால்வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via