முதல்வர் வருகை:திருவாரூரில் அவர் தங்கும் பகுதி  காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது

by Editor / 21-02-2023 09:37:55am
முதல்வர் வருகை:திருவாரூரில் அவர் தங்கும் பகுதி  காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ள நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் அரியலூர் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 1200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முதல்வர் தங்கும் வீடு உள்ள சாலை முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.

 

Tags :

Share via