இளம் மருத்துவ முதுநிலை மாணவி பலி

by Staff / 27-02-2023 01:52:00pm
இளம் மருத்துவ முதுநிலை மாணவி பலி

ஹைதராபாத்தின் வாரங்கலில் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயன்ற மருத்துவ முதுகலை மாணவி உயிரிழந்தார். காகதியா மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்துப் பிரிவில் முதலாம் ஆண்டு முதுகலை மாணவி டாக்டர் ப்ரீத்தி இறந்தார். ப்ரீத்தி புதன்கிழமை தற்கொலைக்கு முயன்ற நிலையில், நேற்று இரவு அவர் இறந்தார். மாணவிக்கு மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்த சைஃப் என்ற சீனியர் மருத்துவ மாணவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் ப்ரீத்தியை மனரீதியாக துன்புறுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via