திடீர் மழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை.

by Editor / 28-02-2023 09:22:46am
திடீர் மழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் நெம்மேலி பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த கொள்முதல் நிலையத்தில் நன்னிலம் சோத்தக்குடி திருக்கண்டீஸ்வரம் சன்னாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக அடுக்கி வைத்துள்ளனர்.இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும், நாளையும் தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் 
தற்போது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் நெம்மேலி பகுதிகளில் சாரல் மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருகின்றன.விவசாயிகள் தார்ப்பாய்களை கொண்டு நெல் மூட்டைகளை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via