கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கை: பினராயி விஜயன்
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடிய கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சிகளை மிரட்ட மத்திய அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாகவும், இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறினார். நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், வேலையின்மை, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கை. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்புகளை காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Tags :