வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய பிரஷாந்த் உம்ராவை பிடிக்க  தூத்துக்குடி போலீசார் டெல்லிக்கு விரைவு.

by Editor / 04-03-2023 09:29:37pm
 வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய பிரஷாந்த் உம்ராவை பிடிக்க  தூத்துக்குடி போலீசார் டெல்லிக்கு விரைவு.

தமிழகத்தில் தொழிலாளர்களாக பணியாற்றும் வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய பிரஷாந்த் உம்ராவை பிடிக்க - ஏழு பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைவு.வட மாநில தொழிலாளர் குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பிரஷாந்த் உம்ராவ்  மீது தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பிரசாந்த் உம்ராவ்வை கைது செய்ய தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் ஏழு பேர் அடங்கிய தனிப்படைபோலீசார் இன்று  டெல்லி விரைந்துள்ளனர்.

 

Tags : பிரஷாந்த் உம்ராவை பிடிக்க  தூத்துக்குடி போலீசார் டெல்லிக்கு விரைவு.

Share via