எடப்பாடியே அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் பரபரப்பான போஸ்டர்

by Staff / 10-03-2023 02:12:34pm
எடப்பாடியே அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் பரபரப்பான போஸ்டர்

மதுரை மாநகர் பீ. பி. குளம் நாராயணபுரம், வள்ளுவர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ. தி. மு. க. , மதுரை மாநகர் மாவட்ட வடக்கு தொகுதி 2ஆம் பகுதி நிர்வாகிகள் என்ற பெயரில் சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.இந்த போஸ்டர்களில் தி. மு. க. , காங்கிரஸ் கைக்கூலி துரோகி எடப்பாடி பழனிச்சாமி கழகத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும் எனவும் கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் வகுத்த சட்ட விதியை காற்றில் பறக்க விட்டு நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா வகித்த பதவியை கபளிகரம் செய்ய துடிக்கும் எடப்பாடி கழகத்தை விட்டு வெளியேறு என்ற வாசகங்களோடு ஒட்டப்பட்டுள்ளது.அந்த போஸ்டர்களில் ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் அண்ணா , எம்ஜிஆர் ஆகியோரின் புகைப்படங்களுடன் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தெடுக்கப்பட்ட செல்லுமென உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் மதுரை மாவட்ட பகுதியில் எடப்பாடி அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via