ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் ஜெயந்த்: ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

by Staff / 18-03-2023 04:39:17pm
 ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் ஜெயந்த்: ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

தேனி: அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், பெரியகுளத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் வீர மரணமடைந்தார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் இன்று(மார்ச் 18) சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.அருணாச்சல பிரதேசத்தின் திராங் பகுதியில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலம், வ.உ.சி., தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் ஒரே மகன் மேஜர் ஜெயந்த், 35, 'லெப்டினன்ட்' ரெட்டி ஆகியோர் வீர மரணமடைந்தனர். மேஜர் ஜெயந்த் உடல் தனி விமானத்தில் நேற்று நள்ளிரவு, 1:30 மணிக்கு மதுரை வந்தது. 
விமான நிலையத்தில் அவரது உடலுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இதையடுத்து, அவரது உடல் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரிய சாமி, தேனி கலெக்டர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.தந்தை கண்ணீர் மல்க மேஜர் ஜெயந்த் நாட்டிற்காக நிறைய சாதித்துள்ளார்.அதனால் திருப்தியாக உள்ளது. மகன் ஜெயந்த் இறந்தது வருத்தமாக இருந்தாலும் நாட்டிற்காக அவன் சேவையாற்றியது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via