தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய தலைமைக்கு உள்ளது -பா.ஜ.க.மாநிலத்தலைவா் அண்ணாமலை

by Admin / 24-03-2023 01:16:45pm
தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய தலைமைக்கு உள்ளது -பா.ஜ.க.மாநிலத்தலைவா் அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய தலைமைக்கு உள்ளது நேற்று பிரதமர் மோடி தேசிய தலைவர் நட்டா  ஆகியோர்களை சந்தித்து சென்னை திரும்பிய பா.ஜ.க.மாநிலத்தலைவா் அண்ணாமலை  விமான நிலையத்தில்  பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம் என்றும் பாரதிய ஜனதா கட்சியை ஆளுங்கட்சியாக வளர்க்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பாடுபடுவதாகவும் தெரிவித்தார்  அதோடு தமிழகத்தில் பாஜக தலைவர்களோடு எனக்கு எந்த விதமான தனிப்பட்ட கருத்து மோதல்கள் கிடையாது என்றும் பாரதிய ஜனதா கட்சியை வேகமாகவளர்க்கும் முயற்சியிலேயே நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்றும் தெரிவித்தார் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கு சில முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு தான் வருகின்றோம். அதிமுக பாஜக கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை என்றும் தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய தலைமைக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

 

Tags :

Share via