ஐஐடி மாணவர் தற்கொலை
சென்னை ஐஐடியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் படித்து வந்தார். இவர், வேளச்சேரியில் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் ஐஐடி மாணவர் சச்சின்குமார் நேற்று நள்ளிரவு வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேளச்சேரி போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :