பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கலாஷேத்ரா தேர்வுகள் தொடக்கம்..

by Staff / 05-04-2023 03:45:55pm
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கலாஷேத்ரா தேர்வுகள் தொடக்கம்..

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் ஒரு பேராசிரியர் உள்பட நான்கு பேர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மகளிர் ஆணைய தலைவர் குமாரியும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.இதில் ஒரு பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் 3 பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதாகவும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில் இன்று முதல் தேர்வுகள் தொடங்கும் என்றும் தேர்வில் மாணவிகள் பங்கேற்குமாறும் கல்லூரி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை அடுத்து இன்று காலை தேர்வுகள் தொடங்கிய நிலையில் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via