பயங்கர விபத்து நான்கு இந்தியர்கள் பலி

by Staff / 13-04-2023 11:23:52am
பயங்கர விபத்து நான்கு இந்தியர்கள் பலி

நேபாளத்தில் பயங்கர சாலை விபத்து நான்கு பேரின் உயிரைப் பறித்தது. பாக் மாதி மாநிலத்தின் சிந்துரி மாவட்டத்தில் கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் நான்கு இந்திய பயணிகள் உயிரிழந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வர தாமதமானதால், ராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இது குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via