7 மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் அதிரடி கைது
நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலைய சரகப்பகுதியைச் சேர்ந்த தச்சக்குளம் சுடலை என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கின் விசாரணையில் கடந்த ஏழு மாதங்களாக நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி களக்காடு போலீசார் சுடலையை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Tags :