திருமணமான 8 மாத இளம்பெண் பெங்களூரில் கொலை கணவர் கைது

by Staff / 14-04-2023 01:25:24pm
திருமணமான 8 மாத  இளம்பெண் பெங்களூரில் கொலை கணவர் கைது

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் மகள் ஜெனிலா ஜோபி (23). இவர் பிஎஸ்சி ரேடியோகிராபி படித்தவர். இவருக்கும் கருங்கல் அருகே எட்டணி பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சேம் மரியதாஸ் பெங்களூருவில் வசித்து வருகிறார். இதையடுத்து திருமணத்திற்கு பின் ஜெனிலாவும் கணவருடன் பெங்களூர் சென்றுள்ளார். சேம் அடிக்கடி யாரி மோ போனில் பேசிக் கொண்டிருப்பாராம். இதை ஜெனிலா கண்டித்ததால் கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு உள்ளது. இந்த நிலையில் ஒரு இளம் பெண் பெங்களுருவில் உள்ள இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சொல்லுவாராம். விசாரித்த போது தோழி என்று கூறி உள்ளார்.
ஆனால் தொடர்ந்து அந்த பெண் வீட்டிற்கு வருவதால் சந்தேகம் அடைந்த ஜெனிலா இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது திருமணத்திற்கு முன்னரே இருவரும் காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த பெண்ணுடன் தான் சேம் பேசிக் கொண்டிருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனால் கணவன் மனைவி கிட்டயே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெனிலா படுக்க சென்றுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த அவரை சேம் மரியதாஸ் சராமரியாக கத்தியால் குத்தி உள்ளார். சத்தம் கேட்டு சேமின் பெற்றோர் வந்து பார்த்தபோது, ​​ஜெனிலர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதை அடுத்து ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் , ஜெனிலா உடலில் கத்து குத்து அடையாளங்கள் இருந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோடோ பல்லாப்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடம் விரைந்து சேம் மரியதாசை கைது செய்தனர்.ஜெனிலா உடல் இன்று கருங்கல் பகுதி மாங்கரையில் உள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது.

 

Tags :

Share via