முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் அமைச்சர்களுக்கு யாருக்கு எவ்வளவு சொத்து ? பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை.

by Editor / 14-04-2023 02:05:30pm
முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் அமைச்சர்களுக்கு யாருக்கு எவ்வளவு சொத்து ? பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை.

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் அமைச்சர்களுக்கு யாருக்கு எவ்வளவு சொத்து ? பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை.

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ஆட்சியாளர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில் திமுகவினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், யார், எவ்வளவு சொத்து வைத்துள்ளனர் என்ற விவர பட்டியலையும், ஊழல் விவரத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் ரூ.200 கோடியை இரு ஷெல் நிறுவனத்திடம் இருந்து லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார். இதனால் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இன்று தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது :  ஏனோ தானோ என்று இந்த புகாரை வெளியிடவில்லை. பூதகண்ணாடி கொண்டு பாருங்கள், 21ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.

வீடியோவில் வெளியான சொத்து விவரம் பட்டியல் வருமாறு:

ஜெகத்ரட்சகன் - ரூ.50,219.37 கோடி

எ.வ.வேலு - ரூ.5,442.39 கோடி

கே.என்.நேரு - ரூ.2,495.14 கோடி

கனிமொழி- ரூ.830.33 கோடி

கலாநிதிமாறன் - ரூ.12,450 கோடி

டிஆர் பாலு - ரூ.10,841.10 கோடி

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் - ரூ.579.58 கோடி

கலாநிதி வீராசாமி - ரூ.2,923.29 கோடி

பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி - ரூ.581.20 கோடி

திமுக கட்சியின் சொத்து மதிப்பு - ரூ.1,408.94 கோடி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி

உதயநிதி - ரூ.2,039 கோடி

சபரீசன் - ரூ.902.46

ஜி ஸ்கொயர் வருமானம் - ரூ.38,827.70 கோடி.

மொத்தம் ரூ.1,343,170,000,000 (ரூ.1,34,317 கோடி)

ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம்.

பின்னர் அண்ணாமலை கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.200 கோடிக்கு ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தோ யூரோப்பியன் வென்சர் பிரைவேட் லிமிடெட் என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஷெல் கம்பெனியும், ஹாங்காங்கை சேர்ந்த குளோபல் கிங் டெக்னாலஜி என்ற ஷெல் கம்பெனியும் தான் 2011ல் தேர்தல் நிதியாக இந்த பணத்தை ஸ்டாலினிடம் லஞ்சமாக கொடுத்துள்ளது. இதனை சிபிஐ இயக்குனரிடம் நானே நேரடியாக புகார் அளிக்க உள்ளேன். இதில் மத்திய அரசின் 15 சதவீத பங்கு இருப்பதால் இதனை சிபிஐ விசாரிக்க முழு உரிமை உள்ளது. இது நம் ஜனநாயகத்திற்கான போராட்டம். ஊழல், லஞ்சம் குறித்து இப்போது கேள்வி கேட்காவிட்டால், தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு காத்துக்கொண்டு இருக்கிறது.

 

Tags :

Share via