சாலை விபத்து.. ஒருவர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் பகுதியில் திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் பயங்கர சாலை விபத்து நடந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ, கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தின் காட்சிகள் காரின் டேஷ் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டோ டிரைவர் தவறான வழியில் வேகமாக வந்ததும், கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதும் வீடியோவில் உள்ளது.
Tags :