இபிஎஸ்-ஐ அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை மத்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், சட்டவிதிகள் உள்ளிட்டவற்றை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதனை அக்கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இரட்டை தலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, மீண்டும் பொதுச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. தற்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனி அணியாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :