பட்டியலின சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

by Staff / 07-05-2023 05:03:57pm
பட்டியலின சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கரில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இரு சமூகத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல், பட்டியலினத்தவரின் வீட்டிற்குள் துப்பாக்கியுடன் புகுந்துள்ளனர். மேலும் அக்குடும்பத்திலிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கண்ணீர் மல்க பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via